கடைசியாக குறிப்பிட்டிருந்தரீ்களே தேவராஜ் நேர்மையானவர் , இதழியல் தர்மத்தை கடை பிடித்தவர் என்று? அப்படியானால் நீங்கள் ஒன்று அவர் காலத்தில் வேலை செய்தவராக இருந்திருக்க முடியாது இல்லையென்றால் அவருக்கு சூதொடச்சான் வேலையை நீங்கள் செய்பவராக இருக்க வேண்டும்.
ஐயா அவரது காலத்தில் தானே கிட்டத்தட்ட 30 பேரை இரண்டு வருடங்களில் வெளியேற்றினார்? பொம்பிளை விடயத்தில் ஒன்றும் செய்யாதவர் என்பது உண்மை ஏனென்றால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு செய்ய வேண்டிய இடத்தில் ஒன்றுமே இல்லையே 2006 இல் ஆபரேசன் நடந்தது கேட்டுப்பாருங்கள்.
என்னது மித்திரன், மெட்ரோ, வாரவெளியீட்டை தனியாக நடத்தினாரா? வரலாறு தெரியாத பப்பரே நீர் தான் அய்யா? மித்திரனை வெற்றிகரமாக செய்தது தற்போதைய தமிழ் மிர்ரர் ஆசிரியர் மதன், மெட்ரோவை ஆரம்பித்து பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக கொண்டு நடத்தியவர்கள் தினக்குரலில் இருந்து வந்த ரஜீவனும் தற்போது சூரியகாந்தி ஆசிரியராக இருக்கும் சிவகுமாரனும்.
இவர்கள் எங்கே எதிர்காலத்தில் தனக்கு அச்சுறுத்தலாக வந்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் மதன் மீது குற்றம் சுமத்தி வெளியேற்றினார், ரஜீவனின் தாயார் இந்தியாவில் இறந்து விட்ட போது அவர் மீது குற்றம் சுமத்தி தனியாக பத்திரிகையை நடத்திய சிவகுமாரை அலர்சாண்டரை வைத்து மிரட்டி மெட்ரோ நியூசை தன் வசப்படுத்தியவர்.
பின்பு சிவகுமார் முகாமைத்துவ இயக்குனருக்கு நெருக்கமானவர் என்பதை அறிந்து கொண்டு எங்கே உண்மையை சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் மெட்ரோவுக்கு வேண்டா வெறுப்பாக ஆசிரியராக்கினார்.
ஆனால் அது வரை பொறுத்துக்கொண்டிருந்த சிவகுமாரன் சகல விடயங்களையும் முகாமைத்துவ இயக்குனருக்கு எடுத்துக்கூறி பல திறமையானவர்கள் வெளியேற தேவராஜ் என்ற குள்ளநரியே காரணம் எனத்தெளிவு படுத்தினார்.
செய்திகளை போடுவதற்கு பல இலட்சக்கணக்கான தொகைகளை வாங்கி மாட்டிக்கொண்ட தேவராஜுக்கு கடைசியில் கிடைத்த தண்டனை ஆலோசகர் என்று சும்மா உட்கார்ந்து இருக்கும் பதவி. இருந்தாலும் அரசியல் ஆசை வந்து விட தான் விமர்சித்த இ.தொ.காவில் சேர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 125. தோற்ற பிறகு முதுகில் குத்தி விட்டார்கள் என பகிரங்கமாக அவர் கூறியது 25 வருட காலமாக அவருக்கு சோறு போட்ட வீரகேசரியை.
நீர் குறிப்பிட்ட விடயங்களில் உண்மைகள் இருக்கலாம் ஆனால் இந்த வரலாறு எல்லாம் தெரியாது இதே வீரகேசரியில் இருந்து கொண்டு அது கொடுக்கும் சம்பளப்பணத்தை வாங்கி தின்று கொண்டு அதற்கு எதிராக எழுதுகிறீரே இதை விட துரோகத்தையா வீரகேசரி தனது ஊழியர்களுக்கு செய்து விட்டது?
உண்மையில் யாரோ கொடுக்கும் பிச்சை காசுக்கு ஆமர் வீதி மென்சனில் குடித்து விட்டு நீர் கடமையாற்றும் நிறுவனத்திற்கு எதிராக எழுதுகிறீரே நீர் ஒரு அப்பனுக்கு பிறந்தவனா?
---------******--------*******----------********
மின்னஞ்சலுக்கு நன்றி அன்பரே,
தேவராஜை பற்றி எமக்கும் நன்றாகத் தெரியும். அவரது தில்லுமுல்லுகளையும் நாம் அம்பலப்படுத்துவோம். நாம் யார் சார்பாகவும் செயற்படவில்லை.
எம்மை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றமைக்கு நன்றி. எமது குழுவில் நால்வர் மாத்திரமே வீரகேசரியில் தற்போது தொழில் புரிகின்றார்கள். ஏனையவர்கள் வெளியில்தான் இருக்கிறார்கள்.
உங்களது மடலுக்கு நாம் விரைவில் பதில் எழுதுகிறோம்.
இப்படிக்கு,
ஆசிரியர் - இலங்கை இதழியல்
No comments:
Post a Comment