Tuesday, June 28, 2016

ஏக்கலையில் நடந்த சல்லாபம்!


( அ.கொம்பேறி மூக்கன்)

க்கலை புரொஜெக்ட்டுக்காக வீரகேசரியின் இடைநிலை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டார். தயாளனின் வண்டவாளங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டுள்ள அதிகாரி அவர்.

அவருக்குரிய பணிகள் அனைத்தும் ஏக்கலையிலேயே அமைக்கப்பட்டன. குமார் நடேசனின் நேரடி பணிப்புரைக்கு அமைய அவர் அங்கு முழுநேரப் பணியாளராக கடமையாற்றினார்.
ஏக்கலையில் கெமரா பொருத்துதல், ஐ.டி.சம்பந்தமான தொழில்நுட்பங்களை பார்த்தல் என்பனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பணிகள்.

நாம் சொல்லப்போகும் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டன.

அந்த அதிகாரியின் பெயரை ஏ என்று வைத்துக்கொள்வோம்( சாலப்பொருத்தமாகத்தான் இருக்கிறது).

ஏ அங்கு பணியாற்றத்தொடங்கியபோது பெரும்பாலும் தனிமையிலேயே கடமைகளை செய்தார். முதலாவது மாடியிலுள்ள தனியறைதான் அவருடையது. அங்கு வேறு யாரும் வருவது மிக மிகக் குறைவு.

ஏக்கலையில் தனிமையாக இருந்த ஏ அதிகமான நேரத்தை நீலப்படம் பார்ப்பதில் தான் கழித்தார்.

கேட்பார் யாருமில்லை, பார்ப்பாரும் யாருமில்லை என்பதுதான் அவருக்கு அங்கு கிடைத்த பணிச் சன்மானம்.

அப்படி நீலப்படங்களை பார்த்து பார்த்து அவருக்குள் ஏதோவொரு தூண்டுதல் உருவாகியது.

அதன் காரணமாக அவர் என்ன செய்தார் தெரியுமா?
ஏக்கலை புரொஜெக்டில் இன்ஜினியராகவும் தொடர்பாடலுக்கு பொறுப்பாகவும் இருந்த ஒரு பெண்ணை வலைத்துப்போட்டார்.

அந்தப் பெண்ணும் ஏ சொல்லும் ஏ ஜோக்குகளுக்கு மயங்கி இசைந்துகொடுத்தார். சாதாரண எஸ்.எம்.எஸ். இல் ஆரம்பித்தது அவர்களுடைய உறவு.

அது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும்போது ஏ இன் வேலை செய்யும் நேரமும் அதிகமானது.
காலையில் 8 மணிக்கு வரும் ஏ இரவு 8 மணியைத் தாண்டியும் அங்கு பணிபுரியத் தொடங்கினார். செந்திலுக்கும் குமாருக்கும் அப்படியொரு சந்தோஷம்.

இப்படியொரு அர்ப்பணிப்பான பணியாளர் இருக்கிறாரே என களிப்படைந்தனர். ஆனால் ஏ என்ன செய்தார்? கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய காதல் காமம் வரை நகர்ந்தது.

முதலாம் மாடியிலுள்ள தனது அறைக்கு அழைத்து உரசல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது இருந்தாலும் காலப்போக்கில் அனைத்து ஊழியர்களும் இதை அறிந்துகொண்டார்கள்.

அந்தப் பெண்ணை முச்சக்கர வண்டியில் அழைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில் வெளியில் செல்லும் அளவுக்கு அவர்களுடைய உறவு விரிந்தது.

இது பற்றி ஏக்கலையில் சலசலப்பாக கதை அடிபட்டது. ஆனாலும் ஏ தனது காதல் பணியை நிறுத்தியதாக இல்லை. அவர் தனது அறையில் அந்தப் பெண்ணுக்கு உதட்டோடு உதடுவைத்து முத்தம் கொடுத்ததை வேறொரு ஊழியர் தனது கெமரா போனில் படம் எடுத்துக்கொண்டார்.

அது வைரலாக பரவத்தொடங்கியபோதுதான் அங்கு பிரச்சினை உருவானது.

ஏ எப்படியோ தனது தொழில் இராஜதந்திரத்தை பயன்படுத்தி அந்த ஊழியரை (அவர் கட்டட நிர்மாணப் பணியாளர்) இடைநிறுத்திவிட்டார்.

ஆனால் அந்த ஊழியர் தனது நிறுவனத்தக்கு இந்த விவகாரத்தை அறிவித்துவிட்டார். அதன்பின்னர் அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டார்.

இந்த விடயம் வீரகேசரியில் அதிகமான ஊழியர்களுக்கு தெரியும். எனினும் கென்டீனிலும் பாரிலும் கதைத்துவிட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்.

ராமா ராமா காயை காத்திருந்து பழுக்கவைப்பதை விட பழமே  கிடைத்தால் எப்படியிருக்கும். அதுவும் பாலில் நழுவி விழுந்துவிட்டால்!

நீ சந்தோஷமாய் இரு ராமா!

2 comments: