Wednesday, June 29, 2016

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

(இ. திருச்சக்கரன்)

தன் வாயைக் கொண்டு எல்லாரையும் ஆட்டிப்படைத்த அமுனுகமவின் வாய் இப்போது அடங்கவிட்டது.
ஐயோ….அவங்களோட மூஞ்சியையே பார்க்க முடியல்ல.

இப்படி எத்தனைபேரின் வாழ்க்கையை சீரழித்திருப்பீர்கள். உங்களைப் பற்றிய உண்மையை நாம் புட்டுப்புட்டு வைத்தவுடன் (இன்னும் இருக்கிறது) எப்படி நிலைமை மாறிப்போனது?

யார் இதுவென்று கண்டுபிடியுங்கள் என அமுனுகம ஒருசில நம்பிக்கையான ஆட்களை நியமித்திருக்கிறார். அவர்கள் எமக்கும் நம்பிக்கையானவர்கள்தான் அம்மையாரே!

நாம் எமது பதிவுகளை ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழிந்திருக்கின்றன. இதுவரை 15554 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல, பயத்தில் பலர் திருந்தியிருக்கிறார்கள். சிலருக்கு கிலிகொள்ளவைத்திருக்கிறது சில பதிவுகள்.

இத்தனை சம்பவங்கள் நடந்தும் எமக்கு ஒன்றுமே தெரியாதே என அங்கலாய்க்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

அமுனுகம குறித்த புதியதொரு தகவல் எமக்கு மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றிருக்கிறது. நாம் எந்தத் தகவலையும் உறுதி செய்யாமல் பதிவேற்றுவது கிடையாது. அந்த வகையில் எமது குழுவினர் இதுதொடர்பில் ஆராய்கிறார்கள்.

ஏக்கலை புரொஜெக்ட்டுக்கு சாமான்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான தகவலே எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.

அது உண்மையாயின் இனி பலரது பொறுப்புகள் ஆட்டம் காணப்போகிறது தோழர்களே.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆட்டம் முடியும் நேரமடா!

விரைவில் சந்திப்போம்.

(வீரகேசரிக்கு தொலைபேசி இணைப்புகளை பெற்றுக்கொடுத்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பெறுமதியான போன்களை இலவசமாக பெற்றுக்கொண்ட கதையை நாளை இரவு எதிர்பாருங்கள்)

No comments:

Post a Comment