Tuesday, July 30, 2019

சொல்லியடிப்பான் அல்லிராஜா!

-ஹரிச்செல்வன் சத்தியமூர்த்தி-

வாழ்க்கை ஒரு முடியாத பயணம். இறப்போடு இம்மை முடிந்துவிடுகிறது என நினைக்கிறோம். ஆனாலும் வாழும் காலத்தில் எமது எண்ணவோட்டங்கள், நாம் விதைத்தவை எப்போதும் மரணிப்பதில்லை.

உதாரணத்துக்கு ஒருவருக்குப் புதிய வார்த்தையொன்றை கற்றுக்கொடுத்திருந்தோமானால், அந்த வார்த்தையை அவர் நினைவில் வைத்திருப்பாரானால் அதனூடாக நாம் வாழ்கிறோம் என அர்த்தம். மற்றுமொரு உதாரணத்தைச் சொல்கிறேன் - ஒரு மாமரத்தை நாம் விதைத்து வளர்த்துவிட்டிருந்தால் அந்த மரம் எமது எண்ணங்களைச் சுமந்துதான் வளருமாம். அதற்கு எம்மை அறிந்துகொள்ளும் திறன் இருக்கிறது.

ஒரு பூஞ்சோலையில் - கவலையுடன், மன விரக்தியுடன் உள்ள ஒருவரை முதல் நாளும் சந்தோஷமாக இருக்கும் இன்னொருவரை மற்றைய நாளும் நடந்து சென்று கொஞ்ச நேரத்தை அங்கு கழிக்கச் சொன்னார்களாம். அந்த நேரத்தில் -முதல்நாள் பூக்களில் வாட்டம் காணப்பட்டதாகவும் மறுநாள் அவை செழிப்பாக இருந்ததாகவும் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எண்ணங்கள் தான் மனிதனை வழிநடத்துகின்றன. தூய்மையான சிந்தனையுள்ளவர்கள் எப்போதுமே பிரகாசமாக இருக்கிறார்கள்.
என்ன? மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும் தலைப்போடு தொடர்புபடவில்லை என நினைக்கிறீர்களா?

தலைப்பு ஒரு சுவாரஷ்யத்துக்காக இட்டது தோழர்களே!
அண்மையில் ஒரு பிரிவில் உள்ள இளசுகள் (சில பழசுகளும்) குறுகிய சுற்றுலா ஒன்றுக்கான திட்டமிடல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஓர் இளம் சிட்டு, தான்னுடைய காதல் சிட்டையும் அழைத்துவர மிக இரகசியமாக, நெருக்கமான ஒருவரிடம் அனுமதி கேட்டதாம்.

அந்தக் கதை எப்படியோ தலைமையாளரிடம் சென்றுவிட தன்னிடம் இந்தக் கதையைச் சொன்னவரிடம் கடுகாய் பொறிந்துவிட்டாராம்.

அதற்கு அவர் சொல்லியிருக்கிற காரணம் இதுதான் -
“எனக்கு அவளை வேறொருவருடன் பார்க்க முடியாது”

என்ன கொடுமை சரவணா! வயதில் மூத்தவர் எப்படியொரு எண்ணத்தை தனக்குள் வளர்த்திருக்கிறார். வெளியில் வேஷம்போடும் இவ்வாறானவர்களை நாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் தயங்கமாட்டோம்.

அதற்கான நேரம் இதுவல்ல எனப் பொறுத்திருக்கிறோம். லுணுகலையில் சிறு வயதில் சல்லாபம் செய்ததை, விடலைத்தவறு என விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த வயதிலும் ஆசை கொண்டு அடைய முற்படுகின்றவர்களை காலத்திற்கேற்றாற்போல வெளிக்கொண்டு வருவோம்.

எண்ணங்களை முறையாகவும் தூய்மையாகவும் அமைத்துக்கொள்வோம் தோழர்களே. அதைவிடுத்து, எல்லாப் பெண்களுக்கும் ஆசைபடுவது முறையல்ல, அவரது பதவிக்கும் வயதுக்கும் பொருத்தமில்லை என்றே சொல்ல வேண்டும்.

கிழமையில் 3 நாட்களுக்கு அவருக்குத் தலைவலி வந்துவிடும். சித்தாலேப்பையை அப்பிக்கொண்டு ஒரு சீன் காட்டுவாரே...அதனால் அந்தப் பிரிவில் உள்ள அனைவருக்குமே தலைவலிதான். இதுதான் ஒருவரின் எண்ண அலைகள் எவ்வாறு மற்றையோரைப் பாதிக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம்.