Thursday, January 10, 2019

விடைபெறுகிறான் சூ தொடச்சான்!

(எம்மானுவேல் கலாபவனி)

வீரகேசரி காலத்துக்குக் காலம் பலரை வளர்த்துவிட்டிருக்கிறது, மேலும் பலரை வீழ்த்திவிட்டிருக்கிறது. தொழில் ரீதியாக, ஆளுமை ரீதியாக, பக்குவம், எளிமை என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். கோடி, கோடியாய் பணம், வஞ்சகம், சூழ்ச்சி, போட்டுக்கொடுத்தல் என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

காலம் பதில் சொல்லும் என்பார்களே, அதற்குப் பொருத்தமானதுதான் சூ தொடச்சானின் விலகல்.

சூ தொடச்சானை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது முகாமைத்துவத்தின் மூன்று வருடகாலத் திட்டம். ஆனாலும் நிறுவனத்தின் சகல உள்ளக விடயங்கள் உட்பட அனைத்தும் அவனிடத்தில் காணப்பட்டதாலும் சிவப்புச் சேலை மேல்மருவத்தூர் அம்மாவுடனான மிக மிக நெருக்கமான தொடர்பு காரணமாகவும் விலக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், திட்டமிட்டே சடா க்கும் லவனுக்கும் மேலதிக கடமைகளும் வழங்கப்பட்டு, சூ தொடச்சானைக் கண்காணிக்க வேண்டிய  பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.

மெதுவாக சூ தொடச்சானை அங்கிருந்து அகற்றும் பணிகளில் செவ்வனே இவ்விருவரும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் வீரகேசரி இணையத்துக்கு மாத்திரம் பொறுப்பாக மாற்றப்பட்ட சூ தொடச்சான், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகினான்.

பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்களும் உள்ளக ரீதியில் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான்  கடந்த மாதம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளான்.

அவனது ஏனைய தந்திர சூழ்ச்சிகளையும் மறைமுக பணக்கொடுக்கல்வாங்கல்களையும் கண்டுபிடிப்பதற்காக மேலும் சில வாரங்கள் தொழில்புரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால்  அவன் வெளியில் சென்றுவிட்டால் வைக்கோலுக்குள் விழுந்த குண்டூசி போல மாயமாகிவிடுவான். இப்போது சிவப்புச்சேலை அம்மணிக்கு ஒரே வருத்தமாம். இரண்டு பேரும் சேர்ந்து அடித்த கொள்ளைகளை தொடர முடியாதது ஒருபக்கம், இதுவரையான கொள்ளைகளால் சிக்கிவிடுவோமோ என்றொரு அச்சம்.

ஒரு கோடியே 75 இலட்சம் பெறுமதியான சொந்த வீடு
34 இலட்சம் பெறுமதியான சொந்த வாகனம்
யாழ்ப்பாணத்தில் மூன்று காணிகள்... இன்னும் பல.

ஏக்கலை ப்ரொஜெக்டில் பணப்பறிமாற்றம் நடந்த விதம் பற்றி நாம்  கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தோம். அதுமாத்திரமல்லாது டயலொக் நிறுவன கொடுக்கல் வாங்கல் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

டயலொக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் IT குழுவினருக்குத் தெரியவந்துள்ளது. அதனை அவர்கள் இரகசியமாக எம்.டி.யின் காதுகளுக்கு போட்டுக்கொடுத்துள்ளனர்.
இன்னும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை எமது குழுவினர்கள் ஆராய்கிறார்கள். அதில் கிரியை விரட்டியடித்த சம்பவமும் உண்டு.


விரைவில் சந்திப்போம் தோழர்களே!

மெழுகு பொம்மை

-ஆச்சர்யா சட்குணராசா-

பிரம்மனின் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைதான். அவை, தனி மனித இரசனையில் எவ்வாறு நோக்கப்படுறது என்பதைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஆதிகாலத்தில் நல்ல சிந்தனைகள் இரசிக்கப்பட்டன, போற்றப்பட்டன. ஆனால் கலியுகத்தில் வெளித்தோற்றமே பொதுவாகப் பார்க்கப்படுவதுடன் அதைக்கொண்டே இயல்நிலையும் எடைபோடப்படுகிறது.

இங்கே மெழுகு பொம்மை என்று நான் குறிப்பிடுவது அழகிய, இத்தனை அழகா என வியக்கக் கூடிய ஓர் இளந்தென்றலைப்பற்றிய பதிவாகும்.

எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஆசிரிய பீடத்தில் மாத்திரம் தான் சுமாரான பெண்களை பணிக்கு அமர்த்துவார்கள், மற்றைய பிரிவுகளில் அழகிய பெண்களுக்குக் குறைவிருக்காது என்பது நீண்டகாலமாக நிலவுகின்ற கருத்தாகும்.

(ஆசிரிய பீடப் பெண்கள் கோபிக்க வேண்டாம். நீங்கள் சிந்தனையால் அழகானவர்கள்)

இங்கே பெருந்தலையொன்றின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மெழுகு பொம்மை அங்கு பணியாற்றும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துவருகிறார். ஒவ்வொரு நாளும் தன்னை வித்தியாசமாகக் காட்ட முற்படும் விதம், பேச்சு, நடை,  பாவனை என அனைத்திலும் ஏனையோரை விட ஒருபடி விஞ்சியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

நாணமும் பயிர்ப்பும் அவளுடைய இரு கண்கள்.
நான் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவளை உற்று, உற்று இரசித்திருக்கிறேன். இன்னும் இரசிக்கிறேன்.

தேவதைகள் வேறு கிரகங்களில் இல்லை, கற்பனைகளிலும் இல்லை. அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதை அதிகாலையில் அவளுடைய மலர்ந்த முகமும் யாரைப்பார்த்தாலும் இலேசாக புன்முறுவல் செய்யும் பாவனையும் ஒப்புவித்துவிடுகின்றன.

மான்போல துள்ளிச் செல்கையில் அவள் கூந்தல் அசைந்தாடி மகிழுமே... அது ஓர் ஆனந்தம்.
நடுக்கடலின் சிற்றலைகள் போல மெல்லிதாய் இடையசையுமே...அதுவும் ஓர் ஆனந்தம்.

பிரம்மன் குவிவாடி வைத்துப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல அங்க இலட்சணங்களில், கைதேர்ந்த கலைஞனின் ஓவியம் அவள்.


சரி நண்பர்களே, அத்தனையும் இரசனையோடு மட்டும் இருக்கட்டும்.

அழகான  பெண் என்றாலே, சந்தைப்படுத்தல் பிரிவு ஆடவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனாலும் துரதிர்ஸ்டவசமாக அவள் ஏக்கலையில் தொழில்புரிகிறாள்.

இருந்தபோதிலும் இந்த மெழுகு பொம்மை பற்றி நான் எழுதக் காரணம், அனைவருடைய கவனமும் இந்தப் இளம்பெண் மீது இருப்பதுதான். அழகு என்றாலே ஆபத்துதானே? அது உடனடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுவும் பெண் என்றால்??? சொல்லவா வேண்டும்?

இனிவரும் காலம் யாருக்கு ஆபத்தாக இருக்கப்போகிறதோ தெரியவில்லை. எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் இதுவும் கடந்துபோகும் என்பதையும் மனதில்கொள்வோம்.
வாழ்க்கை சிறக்கட்டும்.

(ஸ்ரீலங்கா ஜேர்னலிசம் குழு எனது இந்தக் கட்டுரையை தனது தளத்தில் பிரசுரிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நானும் குறித்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன். எனது மின்னஞ்சல் விபரம் வெளியிட வேண்டாம்)