Thursday, January 10, 2019

விடைபெறுகிறான் சூ தொடச்சான்!

(எம்மானுவேல் கலாபவனி)

வீரகேசரி காலத்துக்குக் காலம் பலரை வளர்த்துவிட்டிருக்கிறது, மேலும் பலரை வீழ்த்திவிட்டிருக்கிறது. தொழில் ரீதியாக, ஆளுமை ரீதியாக, பக்குவம், எளிமை என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். கோடி, கோடியாய் பணம், வஞ்சகம், சூழ்ச்சி, போட்டுக்கொடுத்தல் என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

காலம் பதில் சொல்லும் என்பார்களே, அதற்குப் பொருத்தமானதுதான் சூ தொடச்சானின் விலகல்.

சூ தொடச்சானை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது முகாமைத்துவத்தின் மூன்று வருடகாலத் திட்டம். ஆனாலும் நிறுவனத்தின் சகல உள்ளக விடயங்கள் உட்பட அனைத்தும் அவனிடத்தில் காணப்பட்டதாலும் சிவப்புச் சேலை மேல்மருவத்தூர் அம்மாவுடனான மிக மிக நெருக்கமான தொடர்பு காரணமாகவும் விலக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், திட்டமிட்டே சடா க்கும் லவனுக்கும் மேலதிக கடமைகளும் வழங்கப்பட்டு, சூ தொடச்சானைக் கண்காணிக்க வேண்டிய  பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.

மெதுவாக சூ தொடச்சானை அங்கிருந்து அகற்றும் பணிகளில் செவ்வனே இவ்விருவரும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் வீரகேசரி இணையத்துக்கு மாத்திரம் பொறுப்பாக மாற்றப்பட்ட சூ தொடச்சான், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகினான்.

பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்களும் உள்ளக ரீதியில் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான்  கடந்த மாதம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளான்.

அவனது ஏனைய தந்திர சூழ்ச்சிகளையும் மறைமுக பணக்கொடுக்கல்வாங்கல்களையும் கண்டுபிடிப்பதற்காக மேலும் சில வாரங்கள் தொழில்புரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால்  அவன் வெளியில் சென்றுவிட்டால் வைக்கோலுக்குள் விழுந்த குண்டூசி போல மாயமாகிவிடுவான். இப்போது சிவப்புச்சேலை அம்மணிக்கு ஒரே வருத்தமாம். இரண்டு பேரும் சேர்ந்து அடித்த கொள்ளைகளை தொடர முடியாதது ஒருபக்கம், இதுவரையான கொள்ளைகளால் சிக்கிவிடுவோமோ என்றொரு அச்சம்.

ஒரு கோடியே 75 இலட்சம் பெறுமதியான சொந்த வீடு
34 இலட்சம் பெறுமதியான சொந்த வாகனம்
யாழ்ப்பாணத்தில் மூன்று காணிகள்... இன்னும் பல.

ஏக்கலை ப்ரொஜெக்டில் பணப்பறிமாற்றம் நடந்த விதம் பற்றி நாம்  கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தோம். அதுமாத்திரமல்லாது டயலொக் நிறுவன கொடுக்கல் வாங்கல் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

டயலொக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் IT குழுவினருக்குத் தெரியவந்துள்ளது. அதனை அவர்கள் இரகசியமாக எம்.டி.யின் காதுகளுக்கு போட்டுக்கொடுத்துள்ளனர்.
இன்னும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை எமது குழுவினர்கள் ஆராய்கிறார்கள். அதில் கிரியை விரட்டியடித்த சம்பவமும் உண்டு.


விரைவில் சந்திப்போம் தோழர்களே!

No comments:

Post a Comment