Saturday, April 18, 2020

வெளியில் உள்ள அத்தனை பேரும் புத்தன், காந்தி இல்லீங்க!

-ஆதிரேயன் சந்தோஷ்ராஜ்-

பத்திரிகைத் துறையில் பெண்கள் தொழில்புரிவது பெரும் சவாலான விடயமாகும். ஊடகத்துறையில் பெண்கள் என்றாலே அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் குறைவிருக்காது.

பத்திரிகைத் துறையில், ஆரம்பகாலங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்களுக்கான உந்துதல்கள், மறைமுக செயற்பாடுகள் இருந்துதை மறுக்க முடியாது. அவற்றை எதிர்த்துத் தாண்டி வந்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்க்க முடியாமல் தமது இலட்சியங்களைத் துறந்து வீட்டுக்குள் முடங்கிப் போனவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் பிற்போக்கில் அவற்றில் மாற்றங்கள் இடம்பெறாமலும் இல்லை. நான் என்ன சொல்ல விளைகிறேன் என்பது அந்தத் துறையில் பணியாற்றும் சாதாரண சேவகர் முதல் முகாமைத்துவ அங்கத்தவர் வரை அனைவரும் அறிவர்.

இது இவ்வாறிருக்கையில், இரத்தினசபாபதி பிரபாகன் மாத்திரம் இதற்கு விதி விலக்கானவர் அல்ல. அவரது சேஷ்டைகள் ஏராளம். அவரோடு தாராளமாக இருந்தவர்களும் ஏராளம்.

கடந்த காலங்களில் பல்வேறு கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றமை இதற்குச் சான்றாகும்.

சரி, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு இதுவும் காரணமா என்றால் நிச்சயமாக எம்மையறியாமல் ஆம் என்றே தலையசையும்.

அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்களை சுருக்கமாகப் பதிவிடுகிறேன். இவை வெறுமனே கட்டுக்கதைகள் அல்ல. நாம் எழுதினால் ஆதாரங்களோடு எழுதுவோம் என்பதை வாசகர்கள் நன்கறிவர்.

எடிட்டோரியலில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு தொடர்ந்து இம்சை கொடுத்து வந்துள்ளார் பிரபா. வழமையாக பெண்ணொருவரை தனக்கு முன்னாள் இருக்கச் செய்து அழகு பார்த்து எழுதச் சொல்லுவதும் அவ்வப்போது காம மொழிகளை அவிழ்த்து விடுவதும் அவருக்கு கைவந்த கலை.

“ஏனம்மா.. நேத்து ஒரு படம் பார்தேன். அதில ரெண்டு ஜோடி ரொம்ப அழகா டான்ஸ் பண்ணுவாங்க. மியுசிக்கும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் பொறு… அந்தப் பாட்டு……… சூர்யாட கடைசியா வந்த பாட்டுல ஒன்டுதான்மா…. யோசிச்சு சொல்றேன்.

இல்ல… நான் சொல்ல வந்தது.. அந்த நடிகைக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாது. அவள் வளைந்து நெளிந்து டான்ஸ் பண்ணும்போது சத்தியமா உங்கள தான் நினைச்சேன்….”

இப்படிச் சொல்லி…. ஓர் அசட்டுச் சிரிப்போடு பேச்சுவார்த்தைக்குப் புள்ளியிடுவார் தங்கத்துறை பிரபா.

ஐயோ… எப்படியெல்லாம் பேசுகிறார்…. அப்படியே ஒரு தட்டைப் பிடித்தால் தேனும் பாலும் தங்கமும் அல்லவா நிறையும் என யோசிப்பவர்கள் பலர். அப்படி யோசித்து மாயச் சக்கரத்துக்குள் கட்டுண்டவர்கள் பலர்!

இப்படி சமீபத்தில் ஒரு பெண்ணுடன் உரையாட முற்பட்டு அது படுகேவலமாகிப் போனது.

“இந்தாளு என்னக்கா இப்படியெல்லாம் நடந்துகிறாராரு, ரொம்ப மோசமான ஆளு அக்கா” என ஓர் அக்காவிடம் அந்தப் பெண் கடிந்துகொண்டபோது…..

அதனைக்கேட்டு சர்வ சாதாரணமாகக் கடந்து போனாராம் அந்த அக்கா!
(இதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்)

இந்த விடயம் எடிட்டோரியலையும் தாண்டி, கென்டீனில் ஓட்டையில்லா உழுந்து வடை விற்கும் அண்ணன் வரைக்கும் நகர்ந்திருக்கிறது.

கொசிப் என்றால் நம்மவர்களுக்கு சொல்லவா வேண்டும்? அதிலும் கசாமுசா என்றால் கண்கள் இருமடங்கு திறந்து கதைகேட்குமே தோழர்களே!

வித்தியாதரனின் பாசறையில் பத்திரிகை வடிவமைப்பு படித்த ஓர் இளைஞன் வாரவெளியீட்டுப் பிரிவில் இணைந்திருக்கிறான். அவனைச் செல்லமாகக் கொஞ்சிக் குழாவியிருக்கிறார் பிரபா.

திறமை வாய்ந்த அவனும் இசைந்துகொடுத்து செயற்பட்டிருக்கிறான்.

நட்பின் உச்சம் அதிகமாகி தன்னுடைய ஐபோன் அப்டேட் அனைத்தையும் அந்தச் செல்லத்தம்பிiயை செய்யுமாறு பணித்திருக்கிறார்.

பையனும் கில்லாடிதான். தனக்குத் தேவையானவற்றை பிரத்தியேகமாகச் சேகரித்துக்கொண்டுள்ளான்.

பின்னாளில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் எழ, அந்தப் பையன் விரட்டப்பட்டுள்ளான். (இவ்வாறு பல சம்பவங்கள், அனுபவங்கள் உண்டுதானே ராஜா!)

அவன் போகும்போது சும்மா போகவில்லை, சங்கை ஊதிவிட்டுச் சென்றிருக்கிறான்.

பிரபாவின் அந்தரங்கம், தனிப்பட்ட பயணப் படங்கள் அனைத்தையும் பிரதியிட்டு ஹெச்.ஆர் இடம் பகிர்ந்துவிட்டுச் சென்றிருக்கிறான்.

அது பிரபாவின் தனிப்பட்ட விடயம் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அலுவலகக்காரரர்களே என வியந்திருக்கிறது முகாமைத்துவம்.

இனி, இவையெல்லாம் நடந்தும் அப்பனே முருகா எனச் சொல்லியவாறு சாயிபாபாவைக் கும்பிட்டு உட்கார்ந்திருந்தவருக்கு விழுந்தது அடி!
இணையத்தளம், நவீன தொழில்நுட்பங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத பிரபாகரனால் இந்த ஊரடங்கு நிலைமையில் பத்திரிகையை நடத்திச் செல்ல முடியவில்லை.

வீரகேசரி வார வெளியீட்டின் செய்திகளில் அண்மைய 3 ஆண்டுகளாக தரம் காணப்படவில்லை. ஏனோ தானோ என செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது. கட்டுரைகளும் அவ்வாறுதான்.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ஐந்து பக்கங்களில் இணையத்தளத்தில் வெளிவரும் கட்டுரைகள் தான் வெளிவந்தன. அதைக்கூட அவரால் தடுக்க முடியவில்லை.

தொழில்நுட்பம் என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரைகளும் ஏற்கனவே வெளியாகிய கட்டுரைகளும் பிரசுரமாகின. குறுக்கெழுத்துப் போட்டியிலும் பல பிழைகள் எழாமல் இல்லை.

சமகால அரசியல் பகுதிய தரமற்றுப் போனது, மலையகப் பகுதியில் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே இடம் வழங்கப்பட்டது. இலக்கியப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டது. புதியவர்களை இணைத்துக்கொள்வதிலும் வாய்ப்பு வழங்குவதிலும் பிரபா அக்கறை காட்டவில்லை.

வீரகேசரி வார வெளியீட்டில், கோழிக் குஞ்சிக்கு ஆண்குழந்தை பிறந்தது எனத் தலைப்பிட்டாலும் அதையும் வாசிப்பார்கள் என அசட்டு நம்பிக்கையில் இருந்த பிரபாகனுக்கு இது நல்ல பாடம். அவருக்கு மாத்திரமல்ல, தாங்கள்தான் ஜாம்பவான்கள் என நினைக்கும், தலைக்கணமுடைய அனைவருக்கும் இது பொருந்தும்.

எது எப்படியோ, கர்மா மறுபுறம் சுழல ஆரம்பித்திருக்கிறது.

எல்லாம் மனிதர்கள்தானே, சில வீக்னஸ் இருக்கத்தானே செய்யும் என இலகுவாய் கடந்துபோய்விடலாம். ஆனால் அடுத்து வருபவர்களும் எமது சமூகத்தின் விஷ ஜந்துக்களாக மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

(எழுத்து தொடரும்)

அதிரடியாக தூக்கப்பட்டார் பிரபாகன்!

-ஆச்சர்யா அபிநயவாசன்-

வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியராக கடமையாற்றிவந்த இரத்தினசபாபதி பிரபாகன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீரகேசரி வார வெளியீடு தொடர்ச்சியாக சிறந்த முறையில் வெளிவரவில்லை. அதாவது செய்தியாக்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.

புதியன உட்புகுத்தப்படாமை, செய்தியாளர்களுக்கான தட்டுப்பாடு, இணையவழி கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றமை, சமகால அரசியல் பகுதியில் ஏற்பட்டு வரும் தொய்வு, சமூக வலைத்தளம் மற்றும் நவீன ஊடகங்கள் மீதான பார்வை இன்மை, திறமையான பக்கவடிவமைப்பாளர்களுக்கு இடம் கொடுக்காமை போன்ற காரணங்களும் இன்னும் பலவும் உண்டு.

இந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கைகளின் பிரகாரம் உரிய முறையில் பணிகளைச் செய்யத் தவறியமையை சுட்டிக்காட்டி பிரபாகன் பதவி நீக்கம் இடம்பெற்றிருக்கிறது.

நிர்வாகத்தின் அதிரடித் தீர்மானமாக இந்த விடயம் கவனிக்கப்படுகின்ற போதும் கடந்த ஈராண்டு திட்டங்களின் பெறுபேறாகவே இதனைக் கருதமுடியும்.

ஒருசிலர் கர்மா என்கிறார்கள், இன்னும் சிலர் பாவம் என்கிறார்கள், மேலும் சிலருக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் ஏக்கலையில் நேற்று நடைபெற்றது.

பிரபாகனின் பணிநீக்கம், உள்ளக – வெளியக காரணங்கள் உள்ளிட்ட புதுத் தகவல்கள் பலவற்றுடன் மீண்டும் விரைவில் சந்திப்போம்.

நன்றி.

Tuesday, July 30, 2019

சொல்லியடிப்பான் அல்லிராஜா!

-ஹரிச்செல்வன் சத்தியமூர்த்தி-

வாழ்க்கை ஒரு முடியாத பயணம். இறப்போடு இம்மை முடிந்துவிடுகிறது என நினைக்கிறோம். ஆனாலும் வாழும் காலத்தில் எமது எண்ணவோட்டங்கள், நாம் விதைத்தவை எப்போதும் மரணிப்பதில்லை.

உதாரணத்துக்கு ஒருவருக்குப் புதிய வார்த்தையொன்றை கற்றுக்கொடுத்திருந்தோமானால், அந்த வார்த்தையை அவர் நினைவில் வைத்திருப்பாரானால் அதனூடாக நாம் வாழ்கிறோம் என அர்த்தம். மற்றுமொரு உதாரணத்தைச் சொல்கிறேன் - ஒரு மாமரத்தை நாம் விதைத்து வளர்த்துவிட்டிருந்தால் அந்த மரம் எமது எண்ணங்களைச் சுமந்துதான் வளருமாம். அதற்கு எம்மை அறிந்துகொள்ளும் திறன் இருக்கிறது.

ஒரு பூஞ்சோலையில் - கவலையுடன், மன விரக்தியுடன் உள்ள ஒருவரை முதல் நாளும் சந்தோஷமாக இருக்கும் இன்னொருவரை மற்றைய நாளும் நடந்து சென்று கொஞ்ச நேரத்தை அங்கு கழிக்கச் சொன்னார்களாம். அந்த நேரத்தில் -முதல்நாள் பூக்களில் வாட்டம் காணப்பட்டதாகவும் மறுநாள் அவை செழிப்பாக இருந்ததாகவும் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எண்ணங்கள் தான் மனிதனை வழிநடத்துகின்றன. தூய்மையான சிந்தனையுள்ளவர்கள் எப்போதுமே பிரகாசமாக இருக்கிறார்கள்.
என்ன? மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும் தலைப்போடு தொடர்புபடவில்லை என நினைக்கிறீர்களா?

தலைப்பு ஒரு சுவாரஷ்யத்துக்காக இட்டது தோழர்களே!
அண்மையில் ஒரு பிரிவில் உள்ள இளசுகள் (சில பழசுகளும்) குறுகிய சுற்றுலா ஒன்றுக்கான திட்டமிடல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஓர் இளம் சிட்டு, தான்னுடைய காதல் சிட்டையும் அழைத்துவர மிக இரகசியமாக, நெருக்கமான ஒருவரிடம் அனுமதி கேட்டதாம்.

அந்தக் கதை எப்படியோ தலைமையாளரிடம் சென்றுவிட தன்னிடம் இந்தக் கதையைச் சொன்னவரிடம் கடுகாய் பொறிந்துவிட்டாராம்.

அதற்கு அவர் சொல்லியிருக்கிற காரணம் இதுதான் -
“எனக்கு அவளை வேறொருவருடன் பார்க்க முடியாது”

என்ன கொடுமை சரவணா! வயதில் மூத்தவர் எப்படியொரு எண்ணத்தை தனக்குள் வளர்த்திருக்கிறார். வெளியில் வேஷம்போடும் இவ்வாறானவர்களை நாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் தயங்கமாட்டோம்.

அதற்கான நேரம் இதுவல்ல எனப் பொறுத்திருக்கிறோம். லுணுகலையில் சிறு வயதில் சல்லாபம் செய்ததை, விடலைத்தவறு என விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த வயதிலும் ஆசை கொண்டு அடைய முற்படுகின்றவர்களை காலத்திற்கேற்றாற்போல வெளிக்கொண்டு வருவோம்.

எண்ணங்களை முறையாகவும் தூய்மையாகவும் அமைத்துக்கொள்வோம் தோழர்களே. அதைவிடுத்து, எல்லாப் பெண்களுக்கும் ஆசைபடுவது முறையல்ல, அவரது பதவிக்கும் வயதுக்கும் பொருத்தமில்லை என்றே சொல்ல வேண்டும்.

கிழமையில் 3 நாட்களுக்கு அவருக்குத் தலைவலி வந்துவிடும். சித்தாலேப்பையை அப்பிக்கொண்டு ஒரு சீன் காட்டுவாரே...அதனால் அந்தப் பிரிவில் உள்ள அனைவருக்குமே தலைவலிதான். இதுதான் ஒருவரின் எண்ண அலைகள் எவ்வாறு மற்றையோரைப் பாதிக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம்.

Friday, July 26, 2019

குறிஞ்சியில் முல்லைப் பெண்!

-சந்திரா கார்த்திகேயன்-

ணி, அதிகாலை ஆறு தாண்டியிருந்தது.

நெடிது வளர்ந்து மலைத்து நிற்கும் மலைகளுக்கிடையில் பவ்வியமாய் படுத்துறங்கிக்கொண்டிருந்த மேகக் கூட்டங்கள் மெல்லிதாய் அசையும் அழகு உள்ளத்தில் ஆனந்தத்தை நிறைக்கிறது. மேகம் கரையக் கரைய இரவில் பூத்த முல்லைப் பூ மெதுவாய் தலைகாட்டுகிறது.

உண்மையில் இயற்கை எத்தனை அழகானது! அது அள்ளித்தரும் கொடை எத்தனை புதுமையானது!

ஒவ்வொரு விடியலும் புது இரத்தம் பாய்ச்சுவது போல அதிசயங்களைக் கொட்டுகிறதே? இரசனை உள்ளவர்களுக்கு இயற்கை ஓர் அட்சயம். அதிலும் மலையிடுக்குகளில், சிற்றருவியின் இசையோடு வாழ்தல் பெருந்தவம்.

இத்தனையும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போது கைப்பேசி அழைப்பு கொடுத்தது.

“ஹலோ”
“நான் நிரோ” (கற்பனைப் பெயர் :))
“பெயர் விழுந்தது. சொல்லுங்கண்ணா”
“இன்னிக்கு ஒரு எசைமன்ட் இருக்கு. காலிக்குப் போகனும். முடியுமா?”
“நான் ஊருக்கு வந்திருக்கிறேன் ணா”
“பரவால்ல. இன்னைக்கு ஈவினிங் தான் போகனும். அங்க தங்கனும். நாளைக்கு ஃபுல் டே வர்க்ஷொப் இருக்கு. அது முடிய கொழும்புக்கு வரலாம்”
“என்ன வர்க்ஷொப் ணா”
“என்ன வார்த்தைக்கு வார்த்த அண்ணா, அண்ணானு சொல்றீங்க”
“சரி சொல்லுங்க”
“என்னையும் உங்களையும் போகச் சொல்லித்தான் பொஸ் சொன்னாரு. நீங்க ஈவினிங் இங்க வாங்க. போகலாம்”
“சரி அண்ணா, நான் பார்த்திட்டு கோல் பண்றேன்”
“கட்டாயம் வாங்க. சான்ஸ்ஸ மிஸ் பண்ணக் கூடாது. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் ஒன் பிரின்ட் என்ட் வெப். நீங்க க்ரைம் ஸ்டோரிஸ் செய்றனால இது உதவியா இருக்கும்”
“ம்.. சரிண்ணா”

ஜன்னல்வழியே இயற்கை என்னை அழைத்துக்கொண்டிருந்தது. இலேசான பனி, ஒருவகையான வாசத்தோடு இடமிருந்து வலம் போய்க்கொண்டிருந்தது.

அந்த வாசம் முல்லைப் பூக்களால் பிரசவமானது.

மல்லிகை இனமாயினும் முல்லைக்குத் தனியிடம் உண்டு. எங்கள் வீட்டு முற்றம் முழுவதும் முல்லைப் பூக்கள் எப்போதுமே வரவேற்பதுண்டு. மல்லிகையில் தேனில்லை. முல்லையில் தேனுண்டு என்பார்கள்.

என் குழந்தைப் பராயத்தில் முல்லையை அக்குவேறாகப் பிரித்து ஆராய்ந்ததை மறக்கவே முடியாது.
என் எண்ண அலைகளையெல்லாம் ஒரு கோப்பை தேநீர் பறித்துவிட்டது.

என்ன வர்க்ஷொப்? அப்படி இதுவரை அறிவிக்கவில்லையே? அதுவும் இவரோடு நான் எப்படிச் செல்வது? பலகோணங்களில் சிந்தித்தேன். என் ஊடகத் தோழியர் பலருக்கு அழைப்பெடுத்துக் கேட்டேன்.
அப்படியொன்றும் இல்லை எனப் பதில் வந்தது.

அவ்வாறெனின், அண்ணனின் நோக்கம் என்ன? அவர் காதல் வயப்படுவதுபோலப் பேசும்போது விளையாட்டாக எடுத்துப் பதிலளித்ததை சாதகமாக எடுத்துக்கொண்டாரா?

ஒரே உணவை இருவரும் பகிர்ந்து உண்டதை, பொருள் மாற்றி எடுத்துக்கொண்டாரா? இப்படிப் பலதும் உருண்டோடுகின்றன.

மணி, ஏழு இருபதைக் காட்டியது.

அழைத்தே கேட்டுவிடலாம் என்ற முடிவோடு எண்களைத் தட்டினேன்.

“ஹலோண்ணா”
“சொல்லுங்க மா”
“வர்க்ஷொப் எங்க நடக்குது? யார் நடத்துறாங்க?”
“எனக்கும் தெரியாது. போவோம். நடக்கல னா வந்திருவோம். அவ்வளவு தானே? இதற்கு ஏன் டென்ஷன்?”
“தங்குறதெல்லாம்?”
“என்கூட தங்க தங்க மாட்டீங்களா? நைட் மட்டுந்தானே?”
“என்ன சொல்றீங்க?”
“பயப்படாதீங்க ஒன்னும் பண்ண மாட்டேன் டியர். இப்போ எனக்குத் தான் கொழும்பு நியூஸ் ரூம பொறுப்பு கொடுத்திருக்காங்க. தெரியும் தானே?”
“அதுக்கு?”
“யோசிச்சி முடிவெடுங்க. ஜர்னலிசம் னு வந்திட்டா... எல்லாத்தையும் எட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்”

கைப்பேசியைத் தூக்கி கட்டிலில் எறிந்துவிட்டு, எஞ்சியிருந்த தேநீரை இரசித்து ருசித்தேன். இரசனைகளைத் தவறவிட்டுவிட்டால்... எப்போது? எங்கே இரசிப்பது?

பல முறை அழைப்பு- அண்ணாவிடமிருந்து!
நான் இறுதிவரை ஒத்துழைக்கவில்லை.
மறுத்து மறுத்திருந்தேன்.

அதனால் நான் மிகவும் நேசித்த ஊடகத் தொழிலையும் விடவேண்டியதாயிற்று.

என் இரசனை, இயற்கை மீதான காதல் அனைத்தையும் பொடியாக்கிப்போட்ட அழைப்பு அது. மறக்க நினைக்கிறேன் என்பதாலோ என்னவோ இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் ஆறாத வடுக்களுடன்.

என்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் பலரும் என்னுடைய நிறத்தை வெறுத்தார்கள். நான் கவலைகொள்ளவில்லை. எனக்கான, எனக்கேயான காதல் எங்கேயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்காதவளாக வாழ்ந்தேன்.

ஆனால் என் உடம்புக்கு ஆசைப்பட்டவனை அன்றுதான் பார்த்தேன். இத்தனை நாட்களும் இப்படியொரு நினைவோடுதான் என்னோடு பழகியிருக்கிறான் என நினைக்கும் போது வெந்துச் சிதைகிறது மனது!

ஆகட்டும்! இப்போது இந்த நிமிடத்தில் எந்தப் பெண் அவனுடைய வலையில் வீழ்ந்திருக்கிறாளோ யான் அறியேன்!

குறிஞ்சி மண்ணில் முல்லை வாசம் வீசுகிறது – ஆனால் இரசிப்பதற்கு என்னைத் தவிர யாருமில்லை தோழர்களே!

Wednesday, July 10, 2019

பிச்சை போடும் ஆம குஞ்சான்!

-ஸ்ரீகரன் சந்திரமௌலீஸ்வரன்-

வணக்கம் உறவுகளே,

கடந்த சில மாதங்களாக உங்களைச் சந்திக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. எங்களது குழுவில் இருந்த சிரேஷ்ட அங்கத்தவர் ஒருவர் எமது கூகுள் கணக்கினை தன்வசப்படுத்தியிருந்தமையே இதற்குக் காரணமாகும்.

அது ஒருபக்கம் இருக்கட்டும்.

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஏக்கலைக்கு அனுப்பப்பட்டு கார்ப்பரேட் முறையில் அடிமைகளாக நடத்தப்படுவது நாம் அறிந்த உண்மை. ஆனபோதும் தமிழ் நிறுவனம் என்பதற்காகவும் தமிழ் ஊடகம் என்பதற்காகவும் நாம் அமைதிகாக்கிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அது அவ்வாறிருக்கும்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பிச்சைக்காசு சம்பளம் வழங்கப்படுவது தொடர்பில் நமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதாவது நிறுவனத்தில் இணைந்து இரண்டு, மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர்களது சம்பளம் 17,500 ரூபாவைத் தாண்டவில்லை. மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு தருவதாக போலியாக உறுதியளிக்கப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட வேளையில் ஏற்றிச்செல்வதற்கு பஸ் தயாராக இருக்கிறது.

இது இப்படியென்றால் கொழும்பில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பாடு பெரும்பாடுதான். பாவம் அவர்கள். சாதிக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியக் கனவுகளோடு தொழிலில் இணைந்து இன்று நாய்ப்படும் பாடாய் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இதனால் செய்தியின் தரம் குறையுமேயன்றி வேறென்றும் நடக்கப்போவதில்லை. அத்துடன் உள ரீதியான பாதிப்பு காரணமாக வேறு செயற்பாடுகளுக்கு தள்ளப்படலாம். அதாவது மாற்றுத் தொழில்வாய்ப்புகளை நாடுதல், ஊடகவியலை வெறுத்தல், தமிழ் ஊடகம் தொடர்பில் தவறான நிலைப்பாடு, நிறுவனத்துக்கு எதிராக இயங்குதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

தற்போதைய சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமன்றி ஏனையோருக்கும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது. அதாவது அங்கு தொழில்புரியும் சிங்களவர்களுக்கு அதிகூடிய சம்பளம் வழங்கப்படுகிறது. டிஜிஎம் என்ற பதவியில் இருந்து ஆம குஞ்சான் சகலதையும் இயக்குறான்.

அவனை மீறுவதற்கு நிறுவனம் தயங்குகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் அவன் ஒரு சட்டத்தரணி (ஈயடிச்சான் கொப்பி) என்பதால் நிறுவனம் தொடர்பான சட்ட ஆவணங்களை அவனே தயாரிக்கிறான். ஆதலால் அனைத்து குட்டு, சுத்துமாத்துகளும் அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு எதிராக யாராவது தலைமை அதிகாரிகள் குரல் கொடுத்தால் அடுத்து நடப்பதே வேறு! அவன் ஆம குஞ்சனாக இருந்தாலும், வீரகேசரி அலுவலகத்தில் மனைவியிடம் செருப்படி வாங்கியிருந்தாலும் தமிழனின் குறைகளை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த மூளைக் குஞ்சன்.

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு சாதாரணமாக சிரித்து சிங்காரித்துப் போகும் தலைமைக்கு சில காலத்தின் பின்னர் உண்மை வெளிவரும். ஆனால் அப்போது தரமான, தூர சிந்தனையுடைய ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருப்பார்கள்.

நல்ல வருமானம் கிடைக்கின்ற போது சம்பளம் கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது. சாதாரண சாரதியொருவரின் மாதச் சம்பளத்தை விட பத்திரிகையை நடத்துவதற்கு உறுதுணையாய் இருக்கும் ஊடகவியலாளர்களின் சம்பளம் மிகச் சொற்பம் தான். இதனை உரியவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஆம குஞ்சான் - சிங்களவனுக்கு நல்லா குடுப்பான்!

அவன் பற்றி இன்னும் பல உண்மையான தகவல்கள் விரைவில் வரும் நண்பர்களே.

நன்றி.

Thursday, January 10, 2019

விடைபெறுகிறான் சூ தொடச்சான்!

(எம்மானுவேல் கலாபவனி)

வீரகேசரி காலத்துக்குக் காலம் பலரை வளர்த்துவிட்டிருக்கிறது, மேலும் பலரை வீழ்த்திவிட்டிருக்கிறது. தொழில் ரீதியாக, ஆளுமை ரீதியாக, பக்குவம், எளிமை என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். கோடி, கோடியாய் பணம், வஞ்சகம், சூழ்ச்சி, போட்டுக்கொடுத்தல் என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

காலம் பதில் சொல்லும் என்பார்களே, அதற்குப் பொருத்தமானதுதான் சூ தொடச்சானின் விலகல்.

சூ தொடச்சானை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது முகாமைத்துவத்தின் மூன்று வருடகாலத் திட்டம். ஆனாலும் நிறுவனத்தின் சகல உள்ளக விடயங்கள் உட்பட அனைத்தும் அவனிடத்தில் காணப்பட்டதாலும் சிவப்புச் சேலை மேல்மருவத்தூர் அம்மாவுடனான மிக மிக நெருக்கமான தொடர்பு காரணமாகவும் விலக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், திட்டமிட்டே சடா க்கும் லவனுக்கும் மேலதிக கடமைகளும் வழங்கப்பட்டு, சூ தொடச்சானைக் கண்காணிக்க வேண்டிய  பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.

மெதுவாக சூ தொடச்சானை அங்கிருந்து அகற்றும் பணிகளில் செவ்வனே இவ்விருவரும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் வீரகேசரி இணையத்துக்கு மாத்திரம் பொறுப்பாக மாற்றப்பட்ட சூ தொடச்சான், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகினான்.

பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்களும் உள்ளக ரீதியில் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான்  கடந்த மாதம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளான்.

அவனது ஏனைய தந்திர சூழ்ச்சிகளையும் மறைமுக பணக்கொடுக்கல்வாங்கல்களையும் கண்டுபிடிப்பதற்காக மேலும் சில வாரங்கள் தொழில்புரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால்  அவன் வெளியில் சென்றுவிட்டால் வைக்கோலுக்குள் விழுந்த குண்டூசி போல மாயமாகிவிடுவான். இப்போது சிவப்புச்சேலை அம்மணிக்கு ஒரே வருத்தமாம். இரண்டு பேரும் சேர்ந்து அடித்த கொள்ளைகளை தொடர முடியாதது ஒருபக்கம், இதுவரையான கொள்ளைகளால் சிக்கிவிடுவோமோ என்றொரு அச்சம்.

ஒரு கோடியே 75 இலட்சம் பெறுமதியான சொந்த வீடு
34 இலட்சம் பெறுமதியான சொந்த வாகனம்
யாழ்ப்பாணத்தில் மூன்று காணிகள்... இன்னும் பல.

ஏக்கலை ப்ரொஜெக்டில் பணப்பறிமாற்றம் நடந்த விதம் பற்றி நாம்  கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தோம். அதுமாத்திரமல்லாது டயலொக் நிறுவன கொடுக்கல் வாங்கல் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

டயலொக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் IT குழுவினருக்குத் தெரியவந்துள்ளது. அதனை அவர்கள் இரகசியமாக எம்.டி.யின் காதுகளுக்கு போட்டுக்கொடுத்துள்ளனர்.
இன்னும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை எமது குழுவினர்கள் ஆராய்கிறார்கள். அதில் கிரியை விரட்டியடித்த சம்பவமும் உண்டு.


விரைவில் சந்திப்போம் தோழர்களே!

மெழுகு பொம்மை

-ஆச்சர்யா சட்குணராசா-

பிரம்மனின் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைதான். அவை, தனி மனித இரசனையில் எவ்வாறு நோக்கப்படுறது என்பதைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஆதிகாலத்தில் நல்ல சிந்தனைகள் இரசிக்கப்பட்டன, போற்றப்பட்டன. ஆனால் கலியுகத்தில் வெளித்தோற்றமே பொதுவாகப் பார்க்கப்படுவதுடன் அதைக்கொண்டே இயல்நிலையும் எடைபோடப்படுகிறது.

இங்கே மெழுகு பொம்மை என்று நான் குறிப்பிடுவது அழகிய, இத்தனை அழகா என வியக்கக் கூடிய ஓர் இளந்தென்றலைப்பற்றிய பதிவாகும்.

எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஆசிரிய பீடத்தில் மாத்திரம் தான் சுமாரான பெண்களை பணிக்கு அமர்த்துவார்கள், மற்றைய பிரிவுகளில் அழகிய பெண்களுக்குக் குறைவிருக்காது என்பது நீண்டகாலமாக நிலவுகின்ற கருத்தாகும்.

(ஆசிரிய பீடப் பெண்கள் கோபிக்க வேண்டாம். நீங்கள் சிந்தனையால் அழகானவர்கள்)

இங்கே பெருந்தலையொன்றின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மெழுகு பொம்மை அங்கு பணியாற்றும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துவருகிறார். ஒவ்வொரு நாளும் தன்னை வித்தியாசமாகக் காட்ட முற்படும் விதம், பேச்சு, நடை,  பாவனை என அனைத்திலும் ஏனையோரை விட ஒருபடி விஞ்சியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

நாணமும் பயிர்ப்பும் அவளுடைய இரு கண்கள்.
நான் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவளை உற்று, உற்று இரசித்திருக்கிறேன். இன்னும் இரசிக்கிறேன்.

தேவதைகள் வேறு கிரகங்களில் இல்லை, கற்பனைகளிலும் இல்லை. அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதை அதிகாலையில் அவளுடைய மலர்ந்த முகமும் யாரைப்பார்த்தாலும் இலேசாக புன்முறுவல் செய்யும் பாவனையும் ஒப்புவித்துவிடுகின்றன.

மான்போல துள்ளிச் செல்கையில் அவள் கூந்தல் அசைந்தாடி மகிழுமே... அது ஓர் ஆனந்தம்.
நடுக்கடலின் சிற்றலைகள் போல மெல்லிதாய் இடையசையுமே...அதுவும் ஓர் ஆனந்தம்.

பிரம்மன் குவிவாடி வைத்துப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல அங்க இலட்சணங்களில், கைதேர்ந்த கலைஞனின் ஓவியம் அவள்.


சரி நண்பர்களே, அத்தனையும் இரசனையோடு மட்டும் இருக்கட்டும்.

அழகான  பெண் என்றாலே, சந்தைப்படுத்தல் பிரிவு ஆடவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனாலும் துரதிர்ஸ்டவசமாக அவள் ஏக்கலையில் தொழில்புரிகிறாள்.

இருந்தபோதிலும் இந்த மெழுகு பொம்மை பற்றி நான் எழுதக் காரணம், அனைவருடைய கவனமும் இந்தப் இளம்பெண் மீது இருப்பதுதான். அழகு என்றாலே ஆபத்துதானே? அது உடனடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுவும் பெண் என்றால்??? சொல்லவா வேண்டும்?

இனிவரும் காலம் யாருக்கு ஆபத்தாக இருக்கப்போகிறதோ தெரியவில்லை. எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் இதுவும் கடந்துபோகும் என்பதையும் மனதில்கொள்வோம்.
வாழ்க்கை சிறக்கட்டும்.

(ஸ்ரீலங்கா ஜேர்னலிசம் குழு எனது இந்தக் கட்டுரையை தனது தளத்தில் பிரசுரிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நானும் குறித்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன். எனது மின்னஞ்சல் விபரம் வெளியிட வேண்டாம்)