Saturday, April 18, 2020

அதிரடியாக தூக்கப்பட்டார் பிரபாகன்!

-ஆச்சர்யா அபிநயவாசன்-

வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியராக கடமையாற்றிவந்த இரத்தினசபாபதி பிரபாகன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீரகேசரி வார வெளியீடு தொடர்ச்சியாக சிறந்த முறையில் வெளிவரவில்லை. அதாவது செய்தியாக்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.

புதியன உட்புகுத்தப்படாமை, செய்தியாளர்களுக்கான தட்டுப்பாடு, இணையவழி கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றமை, சமகால அரசியல் பகுதியில் ஏற்பட்டு வரும் தொய்வு, சமூக வலைத்தளம் மற்றும் நவீன ஊடகங்கள் மீதான பார்வை இன்மை, திறமையான பக்கவடிவமைப்பாளர்களுக்கு இடம் கொடுக்காமை போன்ற காரணங்களும் இன்னும் பலவும் உண்டு.

இந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கைகளின் பிரகாரம் உரிய முறையில் பணிகளைச் செய்யத் தவறியமையை சுட்டிக்காட்டி பிரபாகன் பதவி நீக்கம் இடம்பெற்றிருக்கிறது.

நிர்வாகத்தின் அதிரடித் தீர்மானமாக இந்த விடயம் கவனிக்கப்படுகின்ற போதும் கடந்த ஈராண்டு திட்டங்களின் பெறுபேறாகவே இதனைக் கருதமுடியும்.

ஒருசிலர் கர்மா என்கிறார்கள், இன்னும் சிலர் பாவம் என்கிறார்கள், மேலும் சிலருக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் ஏக்கலையில் நேற்று நடைபெற்றது.

பிரபாகனின் பணிநீக்கம், உள்ளக – வெளியக காரணங்கள் உள்ளிட்ட புதுத் தகவல்கள் பலவற்றுடன் மீண்டும் விரைவில் சந்திப்போம்.

நன்றி.

No comments:

Post a Comment