(ஜோதிடாச்சாரியார், பண்டித் சிகாமணி சூலோகசுந்தரம்)
குமார் நடேசன்:
குரு மாற்றம் உங்களுக்கு அனுகூலமான பலன்களையே தரப்போகிறது. எனினும் சனி பார்வை ஏழாம் இடத்தில் உள்ளதால் அவ்வப்போது சிக்கல்கள் தோன்றலாம். ஏக்கலையில் அக்கினி மூலையில் அலுவலகம் அமைந்திருப்பதாலும் பிரச்சினைகள் தோன்றலாம்.
சட்ட ரீதியான சிக்கல்கள் பலவற்றுக்கு நீங்கள் முகங்கொடுப்பீர்கள். ஒவ்வொரு வியாழனும் குருபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் தொல்லைகளை குறைத்துக்கொள்ளலாம்.
மு.செந்தில் நாதன்: இதுவரை உங்களுக்கு தலைவலியாய் இருந்த பிரச்சினைகள் தீரும். எனினும் புதிய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். அலுவலகத்தில் உடன் இருப்போரால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுக்கும் குமார் நடேசனுக்கும் உள்ள உறவினை பிளவுபடுத்த காக்கை கூட்டம் எதிர்பார்த்திருக்கிறது.
நிதி ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். ஏக்கலைக்கு இடமாற்றமும் உண்டு.
மேல்மருவத்தூர் அமுனுகம:
இலட்சத்தை விழுங்கிய உங்களுக்கு இனி கொஞ்சம் கஷ்ட காலம்தான். நீங்கள் கொள்ளையடித்த விவகாரம் மேலிடத்துக்கு தெரியவரலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்களே இந்தத் தகவல்களை ஆதாரத்தோடு வழங்கலாம். சுக்கிரனுடைய பார்வை உங்கள் ராசியில் விழாததால் ஏமாற்று வேலைகள் செய்வதில் சிரமங்கள் ஏற்படும். அவதானத்துடன் செயற்படுவதினூடாக மாத்திரமே பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
(மிகுதி விரைவில்)