Thursday, January 3, 2019

அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?


சீனியர்கள் என்ன செய்தார்கள்?

(எஸ். ராகவேந்திரா)

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தம்மை சீனியர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வோர் இளையோரை வளர விட்டிருக்கிறார்களா அல்லது வளர்த்துவிட்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

உதாரணமாக அண்ணன் பிரபாவை எடுத்துக்கொள்வோம். அவரால் இந்தப் பத்திரிகைத் துறையில் வளர்த்துவிடப்பட்டவர்கள் என ஐவரை இனங்காட்ட முடியுமா? எத்தனையோ வருட சீனியர்கள், பத்திரிகை ஜாம்பவான்கள், ஆசிரியராக எத்தனையோ வருடகாலப் பணி என தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவர் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பாரா?

அவர் எப்போதும் சொல்லும் ஒரு விடயம் தான் ஸ்ரீகஜனை நான்தான் வளர்த்துவிட்டேன் என்பதாகும். ஸ்ரீகஜனை அவர் வளர்க்கவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இதே வழியில் அண்ணன் சேதுராமனும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னர் மெட்ரோவைக் கொண்டு நடத்த அந்த டிப்பார்ட்மன்ட்டில் ஆள் இல்லை. சேதுராமன் திறமையானவர் அவரைக் குறை கூறுவது எமது நோக்கமல்ல.

ஆனாலும், இந்த விடயத்தில் அவர் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

சூரியகாந்தி சிவகுமாரன் - இவர் சூரியகாந்தி பத்திரிகையை நீண்ட காலமாக கொண்டு நடத்தினார். ஆனால் அவரும் இதே பாணியைப் பின்தொடர்ந்து, சூரியகாந்தி எடிட்டோரியலில் இருந்து  ஒருவரையேனும் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்துவிடவில்லை.

செந்தில் நாதன்- ஆரம்ப காலங்களில் மார்க்கட்டிங் இல் முறையான திட்டமிடலுடன் இளைஞர்களை ஊக்குவித்து வளர்த்தார். ஆனால் இப்போது ஒருவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்றளவுக்கு நிலை இருக்கிறது.

ரேணுகா பிரபாகரன் - இவங்க சொந்தமா எழுதின 10 கட்டுரைகளைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். மிஞ்சிப் போனால் கொஞ்சம் நேர்காணல் செய்திருப்பாங்க. அவ்வளவுதான். ஆனால் உதவி ஆசிரியர் பதவி மற்றும் எத்தனையோ வருட பத்திரிகைத் துறை அனுபவம்.

தயாளன் - சொல்லி வேலையில்லை.

எப்.சி- இவங்க எல்லாத்துக்கும் மேல.

ஆம குஞ்சு எச்.ஆர்- இவன் அடுத்த கட்டம் (ஆம குஞ்சுவின் இரகசிய ஏமாற்று வேலை ஒன்று தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் வெளியிடுவோம்)

சீனியர்கள் என்றால் வழிநடத்தக் கூடியவர்களாக, ஏனையோருக்கு உதாரணமாக விளங்க வேண்டும் என்பதை மனதிற்கொள்க.

இது- யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல. தனி மனிதர்களைத் தாக்குவது எமது நோக்கமும் அல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மாத்திரமே.

அடுத்த பதிவில் சந்திப்போம். மெழுகு பொம்மை கட்டுரைக்காக வாசகர்கள் காத்திருப்பது நமக்கும் புரிகிறது தோழர்களே!


Tuesday, January 1, 2019

அடைத்து வைக்கப்பட்ட அடிமைகள்!

-கார்த்தி சிவராமன்-

இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படும் கம்பனிகள் பல தொழிலாளர்களின் நலன்குறித்துச் சிந்திப்பதில்லை. இதற்குப் பல கம்பனிகள் சான்று.

அதேபோல் வீரகேசரியும் தற்போது ஊழியர்களை சிறையில் அடைத்தது போல இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு இயங்குகிறது. இதனைத் தட்டிக் கேட்பதற்கு  நாதியற்றவர்களாக, தினமும்  புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள ஊழியர்கள்.

அதாவது, வீரகேசரி தலைமைக் காரியாலயம் தற்போது ஏக்கலையில் இயங்கி வருகிறது. ஏக்கலை என்றால் ஏக்கலை நகர் அல்ல, அங்கிருந்து சில கிலோமீற்றர் தூரம் உள்ளே செல்ல வேண்டும். அந்த வீதியில் செல்வதற்கு பஸ்கள் இல்லை. கால்நடை அல்லது முச்சக்கர வண்டியில் தான் செல்ல வேண்டும்.

ஊழியர்கள் கொழும்பில் இருந்து பஸ்களில் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மீண்டும் பணி நிறைவின் பின்னர் பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தினமும் பஸ் பயணத்துக்கு மாத்திரம் 4 மணித்தியாலங்கள் செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது அவர்கள் அரைநேர விடுமுறையில் கூட வர முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வீரகேசரியில் பொதுவாகவே சம்பளம் சொற்ப அளவே வழங்கப்படும். மேலதிக நேர தொழிலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் கொஞ்சம் அதிகமாக உழைத்துப் பணம் பெற்ற காலம் உண்டு. ஆனால் ஏக்கலையில் அது முடியாது. குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். இது திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறையாகும்.

மேலதிக நேர வேலைக் கொடுப்பனவாக மாதாந்தம் 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை இப்போது ஆறு இலட்சத்து 81 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி, அவர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாத தொழிற்சாலையாகவே வீரகேசரி தற்போது இயங்கி வருகிறது.
வீரகேசரியில் தொழில்புரிந்தால் ஒருவகையான பெருமை என்பதாலும், வேறு தொழிலைத் தேடிக்கொள்வதில் சிக்கல்களாலும் பெரும்பாலானோர் தொடர்ந்தும் தொழில்புரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் மன ஆதங்கம் சொல்லில் புரிய வைக்க முடியாது.

எம்.டி. உள்ளிட்ட பல பெரும் தலைகள் ஏசி வாகனத்தில் சாரதியருடன் வலம் வந்து கொண்டிருக்கையில் ஏனைய ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். நீண்ட தூர பயணம் என்பதால் உடல் ரீதியான அசதியுடன் நோய்வாய்ப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது உள ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
குடும்பத்துடன் நேரத்தை கழிக்க முடியாத பெரும் சோகம் அங்கு தொழில்புரியும் எல்லாருக்கும் உண்டு.

ஏன் ஏக்கலையில் அலுகலகம் அமைக்க வேண்டும்?

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான உற்பத்தி இயந்திரங்கள் தலைநகர் கொழும்புக்கு வெளியில் நிறுவப்பட வேண்டும் என்ற கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு வந்திருந்தது.
அந்த வகையில் பத்திரிகை அச்சு இயந்திரத்தை மாத்திரம் கொழும்புக்கு வெளியே நிறுவ வேண்டி வந்தது.

அதற்கு, வத்தளை, இராஜகிரிய போன்ற பகுதிகளையும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் பெருந்தலைகளுக்கு கொமிஷன் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருந்ததால் சுய நலனுக்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய அச்சு இயந்திரம் எங்களுடையது எனச் சொல்லிக்கொள்ளும் முகாமைத்துவம் அதனை இலங்கைக்கு கொண்டு வருவதில் பெரும் தொகையான கொமிஷனைப் பெற்றுக்கொண்டது.

அது மாத்திரமல்லாது ஏக்கலையில் நிலத் தெரிவில் யார், யார் எம்.டி.யை ஏமாற்றி கொமிஷன் அடித்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உரிய நிலத்தைப் பெற்றுக்கொடுப்பவர்களுக்கு 3 வீத கொமிஷன் வழங்கப்படும் என எம்.டி. அறிவித்திருந்தார். ஆனால் அதனையும் தாண்டி மூவர் அடித்த கொமிஷன் தொகையோ கோடிகளுக்கு வெளியேயான தொகையாகும்.

அது மாத்திரமல்லாது இன்னும் பல தகவல்கள் உண்டு. அவற்றை இனி வரும் காலங்களில் பதிவு செய்வோம்.
ஆனாலும் இப்போது ஊழியர்களை அடிமைத்தனமாக, சிறைக்குள் பூட்டி வைத்து வேலை வாங்கும் இந்த நிறுவனத்துக்கு எதிராக யார் செயற்படுப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி.

என்னதான் இருந்தாலும் ஊழியர்களின் சாபம், அனைத்துக் கள்ளப் பூனைகளையும் சும்மா விடாது என்பதே உண்மை. காலம் நிச்சயமாகப் பதில் சொல்லும். காத்திருப்போம்.