Thursday, January 3, 2019

சீனியர்கள் என்ன செய்தார்கள்?

(எஸ். ராகவேந்திரா)

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தம்மை சீனியர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வோர் இளையோரை வளர விட்டிருக்கிறார்களா அல்லது வளர்த்துவிட்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

உதாரணமாக அண்ணன் பிரபாவை எடுத்துக்கொள்வோம். அவரால் இந்தப் பத்திரிகைத் துறையில் வளர்த்துவிடப்பட்டவர்கள் என ஐவரை இனங்காட்ட முடியுமா? எத்தனையோ வருட சீனியர்கள், பத்திரிகை ஜாம்பவான்கள், ஆசிரியராக எத்தனையோ வருடகாலப் பணி என தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவர் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பாரா?

அவர் எப்போதும் சொல்லும் ஒரு விடயம் தான் ஸ்ரீகஜனை நான்தான் வளர்த்துவிட்டேன் என்பதாகும். ஸ்ரீகஜனை அவர் வளர்க்கவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இதே வழியில் அண்ணன் சேதுராமனும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னர் மெட்ரோவைக் கொண்டு நடத்த அந்த டிப்பார்ட்மன்ட்டில் ஆள் இல்லை. சேதுராமன் திறமையானவர் அவரைக் குறை கூறுவது எமது நோக்கமல்ல.

ஆனாலும், இந்த விடயத்தில் அவர் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

சூரியகாந்தி சிவகுமாரன் - இவர் சூரியகாந்தி பத்திரிகையை நீண்ட காலமாக கொண்டு நடத்தினார். ஆனால் அவரும் இதே பாணியைப் பின்தொடர்ந்து, சூரியகாந்தி எடிட்டோரியலில் இருந்து  ஒருவரையேனும் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்துவிடவில்லை.

செந்தில் நாதன்- ஆரம்ப காலங்களில் மார்க்கட்டிங் இல் முறையான திட்டமிடலுடன் இளைஞர்களை ஊக்குவித்து வளர்த்தார். ஆனால் இப்போது ஒருவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்றளவுக்கு நிலை இருக்கிறது.

ரேணுகா பிரபாகரன் - இவங்க சொந்தமா எழுதின 10 கட்டுரைகளைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். மிஞ்சிப் போனால் கொஞ்சம் நேர்காணல் செய்திருப்பாங்க. அவ்வளவுதான். ஆனால் உதவி ஆசிரியர் பதவி மற்றும் எத்தனையோ வருட பத்திரிகைத் துறை அனுபவம்.

தயாளன் - சொல்லி வேலையில்லை.

எப்.சி- இவங்க எல்லாத்துக்கும் மேல.

ஆம குஞ்சு எச்.ஆர்- இவன் அடுத்த கட்டம் (ஆம குஞ்சுவின் இரகசிய ஏமாற்று வேலை ஒன்று தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் வெளியிடுவோம்)

சீனியர்கள் என்றால் வழிநடத்தக் கூடியவர்களாக, ஏனையோருக்கு உதாரணமாக விளங்க வேண்டும் என்பதை மனதிற்கொள்க.

இது- யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல. தனி மனிதர்களைத் தாக்குவது எமது நோக்கமும் அல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மாத்திரமே.

அடுத்த பதிவில் சந்திப்போம். மெழுகு பொம்மை கட்டுரைக்காக வாசகர்கள் காத்திருப்பது நமக்கும் புரிகிறது தோழர்களே!


No comments:

Post a Comment