-தென்னவன் இளங்கோ-
வீரகேசரி நிறுவனம் இலங்கையில் பழைமையான பத்திரிகை ஸ்தாபனமாகும். பத்திரிகை தர்மத்தை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும் அதன் முகாமைத்துவமும் நிர்வாகமும் இரத்தம் உறிஞ்சும் போக்கிலேயே செயற்பட்டு வருவது கண்கூடு.
சரி, தலைப்புக்கு வருவோம். வீரகேசரியில் பெண்கள் பாதுகாப்பாக நடத்தப்படுகின்றார்களா? என்றால் அதற்குப் பதில் நூற்றுக்கு 20 வீதம் என்றே சொல்ல வேண்டும்.
வீரகேசரி வார வெளியீட்டுப் பிரிவில் உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பே இல்லை. குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆசிரியரின் காமப்பார்வைக்கும் காமப் பேச்சுக்கும் இலக்காகி வருகின்றனர்.
பாலியல் ரீதியாக அவரால் இயங்க முடியாது என சொல்லப்படுகின்ற போதிலும் பார்வையால் அனைத்தையுமே செய்துவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு ஆசிரியப் பகுதியை எழுதுவதற்கு பெண்ணொருவர் தேவை. பிறர் எழுதிய கட்டுரைகளை கூட வாசிப்பதற்கு பெண்கள் தேவை. அவ்வாறு தன்முன்னால் வந்து அமர்ந்து வாசிக்கும் பெண்களின் மார்பை உற்றுப் பார்க்கும் வழக்கத்தை சுமார் 20 வருடங்களாக மேற்கொண்டு வருகிறார்.
தற்போது பதுளை மாவட்டத்திலுள்ள பெண்ணொருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகிறார்.
வாரவெளியீட்டின் ஆசிரியர் படித்தது வளர்ந்தது எல்லாமே மலையத்தில் தான். அவருடைய தந்தை இரத்தினசபாபதி லுணுகலையில் கள நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஆசிரியர் கூட அதனை எப்போதும் வெளியில் சொன்னதில்லை.
இப்படியிருந்த ஆசிரியர் பெண்களை குறிவைப்பதை நிறுத்தமாட்டார் போலிருக்கிறது. இனி அவருடைய அராஜகம் தொடருமானால் பல உண்மைச் சம்பங்களை நாம் போட்டுடைக்க நேரிடும்.
இது ஒரு பிரிவில் நடக்கும் சம்பவம் தான். அடுத்த பகுதிகள் தொடர்பானவை விரைவில் வெளிவரும்.