Saturday, June 11, 2016

காசு பணம் துட்டு மணி மணி! (பகுதி 1)

அ. செங்கோட்டுவன்

வீரகேசரியின் I.T. புலி தயாளன், ஏக்கலை புரொஜெக்டில் கொள்ளையடித்த விவகாரம் யாவரும் அறிந்த சமாச்சாரம். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு என எத்தனை பேருக்கு தெரியும்?

ஏக்கலையில் காணி பார்ப்பதற்கு நடேசனால் இருவர் நியமிக்கப்பட்டனர். காணி பார்த்தபின்னர் மொத்த தொகையில் 3 வீதம் கொமிஷன் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் காணியை பார்த்து காசை ஏப்பம் விட்ட ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்களில் அணில் குஞ்சுவுக்கும் பங்கு உண்டு. இது பற்றிய விரிவான தகவலை பின்னர் தருகிறோம்.

இந்த புரொஜெக்டில் தயாளன் எப்படி காசை வாரி அள்ளிக்கொண்டார் என்பதுதான் கேள்வி.

ஏக்கலை புரொஜெக்ட் சம்பந்தமான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக தயாளன் நியமிக்கப்பட்டார். அங்கு இலெக்ட்றிக் வேலைகள் உள்ளிட்ட திட்டமிடல்கள் அனைத்தையும் தயாளன் பார்த்தார். எங்கு சாமான்கள் கொள்வனவு செய்கிறாரோ அவர்களிடமிருந்து கொமிஷனை பெற்றுக்கொண்டார். அது சாதாரண சிறிய தொகை அல்ல.

இந்த கொள்ளையடிப்பு விடயத்துடன் அமுனுகமவுக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 

கிராண்ட்பாஸ் அலுவலகத்திலிருந்து ஏக்கலைக்கு இயந்திரத்தை மாற்றுவதற்கு செலவாகிய தொகை எவ்வளவு தெரியுமா? நாற்பது இலட்சம்.

இதில் தயாளனுக்கு மூன்றரை இலட்சமும் அமுனாவுக்கு ஒன்றரை இலட்சமும் பங்கு. தயாளன் இன்னும் ஆத்தல் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இவை தவிர ஏனைய கொள்வனவு கணக்குகளனை அடுத்த பதிவில் தருகிறோம்.

உயரதிகாரிகளின் விஷயம் என்பதால் இவை வெளி உலகத்துக்கு தெரிய வருவதில்லை.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment