Saturday, July 23, 2016

மகிழ்ச்சி..!

- இ.திருச்சக்கரன் - 

வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் இயங்காமை பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

அந்த சங்கத்தின் தலைவர் பிரேம் பாவம். திமிர்பிடித்த முதலாளி சமூகம் மற்றும் எதேச்சதிகாரமாக இயங்கும் முகாமைத்துவத்தின் போக்குக்கு மத்தியில் கூழா மீசையா என்ற நிலையில் இருக்கிறார் அவர்.

தலைவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தை வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து ஓரளவுக்கு பண வருமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அது நிர்வாக்தின் கடும்போக்கினால் தடுக்கப்பட்டுள்ளது.





இதுவே, வாசுவாக செந்தில்நாதனாக தயாளனாக மேல்மருவத்தூர் அமுனுகமவாக பிரபாகனாக இருந்திருந்தால் (தலைவராக) இன்றைய நிலைமை வேறு. கபாலி எந்தளவுக்கு வெற்றியோ அந்தளவுக்கு வீரகேசரி நலன்புரிச் சங்கத்தின் வருமானமும் அதிகரித்து இந்நேரம் பிரேம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்.

ஆனால் நடந்தது, நடப்பது என்ன?

எல்லாவற்றுக்கும் காரணம் பிரேம் அன்று ஆற்றிய கன்னி உரைதான். அதில் சாதாரண ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என ஆணித்தரமாக கூறிவிட்டார்.

அவர் கூறியது அத்தனையையும் செந்திலின் வாயிலாக குமார் நடேசன் மொழிபெயர்ப்பு செய்து காதில் வாங்கிக்கொண்டார்.

இனியென்ன அவர்களின் எஜென்டா படியே அனைத்தும் நடக்கிறது.
வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் அடுத்த தலைமை பதவிக்கு ரேணுகா பிரபாகரன் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் அவருக்கு முடியாது என்று விலகிக்கொள்வார். மீண்டும் அவ்விடத்துக்கு மேல்மருவத்தூர் அமுனுகமவின் ஆசையின் பிரகாரம் நவீனன் நியமிக்கப்படுவார்.

இதுவே வீரகேசரியின் நியதியாகும்.
அதற்குப் பிறகு பழையபடி சங்கம் மீண்டு எழும். அதற்காக முகாமைத்துவத்தின் அனைத்து உதவிகளும் ஒத்தாசைகளும் நவீனனுக்கு வழங்கப்படும்.


அன்பரே பிரேம்,
நீங்கள் பயந்து ஒதுங்கிவிடாதீர்கள். உங்களுக்கு கரம் கொடுக்க நாம் இருக்கிறோம். உங்களது பெயர் வீரகேசரி வரலாற்றில் இடம்பிடிக்கும் வண்ணம் சிறந்த திட்டமிடலுடன் செயற்படுங்கள். வெற்றி உங்கள் வசம். நாம் உழைப்பாளர்கள், கடுமையான உழைப்பாளர்கள். எமக்கு பேதங்கள் கிடையாது. ஆதலால் கடவுள் எங்களை கைவிடமாட்டார்.

எங்களது உழைப்பினால் முன்னேறும் கம்பனியின் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்துக்கும் நமக்கும் வெகு தூரம். அவர்கள் கொள்ளையடிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் இல்லாமல் போகும் என்பது மட்டும் திண்ணமான உண்மை.

கபாலியினால் மகிழ்ச்சியடைபவர்கள் மகிழ்ச்சியடையட்டும். நமக்கு வெற்றி வெகுதூரமில்லை.

நாம் என்றும் உங்களுடன்.



Thursday, July 21, 2016

மஹரகமவில் பிரபா!

வீரகேசரியின் ஆஸ்தானர் பிரபாகன் தனது அந்தப்புறத்தாளுடன் மஹரகமவுக்கு கடந்த வாரம் வந்திருக்கிறார்.
மஹரகமவில் தான் ஆடைகள் மலிவாக இருக்கிறதாம்.

உண்மையான கதை என்னவென்றால் மஹரகம பக்கம் வந்தால் தான் தெரிந்தவர் கண்ணில் படமாட்டார்கள் என்பதுதான்.
இருவரும் எமது குழு அங்கத்தவரின் பார்வையில் சிக்கிவிட்டார்கள்.

அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்ததில் வேறெதுவும் நடக்கவில்லை. ஆடைகள் நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மெல்லிடையை பிடிக்க முயற்சித்த போதும் அது கைகொடுக்கவில்லையாம்.

ஆடைகள் வாங்கிக்கொடுத்து பணமும் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.

தனக்கு ஆமா சாமி போட்டு மற்றையர்களை பற்றி போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தால் இப்படியும் வாழலாம்.

நீ பிழைக்கத் தெரிந்த பெண்தானம்மா!



Sunday, July 17, 2016

கொள்ளையடி மன்னன் அலெக்ஸாண்டர்!


-இ.திருச்சக்கரன்-


மிஸ்டர் அலெக்ஸாண்டர் - இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தொழில் கள்ளக் கூட்டத்தில் ஒருவர்.

வீரகேசரியில் இவர் தொழில்புரியும்போது கொள்ளையடித்த பணம் எவ்வளவு பெரிய தொகை என யாருக்கும் சொல்ல முடியாது. மிகவும் சூட்சுமமான முறையில் கோடிக்கணக்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்தவர் எலெக்ஸ்.


அதனால்தான் அவரை தினக்குரலுக்கு மாற்றிவிட்டார்கள்.


வீரகேசரியில் தற்போது பூங்காவுக்கு அருகில் இருக்கும் மலசலகூடத்தை முன்னின்று செய்தவர் எலெக்ஸ். அதற்காக செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

39 இலட்சம்!

நம்பினால் நம்புங்கள். உண்மையில் இதனை செய்வதற்கு எமது கணிப்பின் பிரகாரம் 18 இலட்சம்தான்.

இவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களிடமிருந்து மாத்திரமல்லாமல் சாமான்கள் கொள்வனவின்போதும் கொள்ளையடித்தார்.

இந்த விவகாரம் முகாமைத்துவத்துக்கு தெரியாமல் இல்லை. நன்றாகத் தெரியும். அதற்குப் பிறகுதான் தினக்குரலுக்கு விரட்டிவிட்டார்கள்.

ட்ரான்ஸ்போர்ட்டுக்கும் பொறுப்பாக எலெக்ஸ் செயற்பட்டார். அப்போது வாகனம் சிறு பழுது என்றாலும் உண்மையானதொகை வேறு கொள்ளையடிக்கும் தொகை வேறு.

இப்படித்தான் தன்னை வளர்த்துக்கொண்டார் எலெக்ஸ். எலெக்ஸ் ஐ வைத்துக்கொண்டால் தனக்கு அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என நினைத்த மேல்மருவத்தூர் அமுனுகமவும் நிறைய கபட நாடகமாடித்தான் எலெக்ஸை விரட்டியடித்தார்.

இப்போது என்ன ஒரு கொள்ளையர் சென்றுவிட்டார். இங்கு கொள்ளையர் கூட்டமேம உருவாகி வீரகேசரியை நாசமாகிக்கிக்கொண்டிருக்கிறது.