Wednesday, July 10, 2019

பிச்சை போடும் ஆம குஞ்சான்!

-ஸ்ரீகரன் சந்திரமௌலீஸ்வரன்-

வணக்கம் உறவுகளே,

கடந்த சில மாதங்களாக உங்களைச் சந்திக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. எங்களது குழுவில் இருந்த சிரேஷ்ட அங்கத்தவர் ஒருவர் எமது கூகுள் கணக்கினை தன்வசப்படுத்தியிருந்தமையே இதற்குக் காரணமாகும்.

அது ஒருபக்கம் இருக்கட்டும்.

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஏக்கலைக்கு அனுப்பப்பட்டு கார்ப்பரேட் முறையில் அடிமைகளாக நடத்தப்படுவது நாம் அறிந்த உண்மை. ஆனபோதும் தமிழ் நிறுவனம் என்பதற்காகவும் தமிழ் ஊடகம் என்பதற்காகவும் நாம் அமைதிகாக்கிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அது அவ்வாறிருக்கும்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பிச்சைக்காசு சம்பளம் வழங்கப்படுவது தொடர்பில் நமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதாவது நிறுவனத்தில் இணைந்து இரண்டு, மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர்களது சம்பளம் 17,500 ரூபாவைத் தாண்டவில்லை. மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு தருவதாக போலியாக உறுதியளிக்கப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட வேளையில் ஏற்றிச்செல்வதற்கு பஸ் தயாராக இருக்கிறது.

இது இப்படியென்றால் கொழும்பில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பாடு பெரும்பாடுதான். பாவம் அவர்கள். சாதிக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியக் கனவுகளோடு தொழிலில் இணைந்து இன்று நாய்ப்படும் பாடாய் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இதனால் செய்தியின் தரம் குறையுமேயன்றி வேறென்றும் நடக்கப்போவதில்லை. அத்துடன் உள ரீதியான பாதிப்பு காரணமாக வேறு செயற்பாடுகளுக்கு தள்ளப்படலாம். அதாவது மாற்றுத் தொழில்வாய்ப்புகளை நாடுதல், ஊடகவியலை வெறுத்தல், தமிழ் ஊடகம் தொடர்பில் தவறான நிலைப்பாடு, நிறுவனத்துக்கு எதிராக இயங்குதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

தற்போதைய சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமன்றி ஏனையோருக்கும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது. அதாவது அங்கு தொழில்புரியும் சிங்களவர்களுக்கு அதிகூடிய சம்பளம் வழங்கப்படுகிறது. டிஜிஎம் என்ற பதவியில் இருந்து ஆம குஞ்சான் சகலதையும் இயக்குறான்.

அவனை மீறுவதற்கு நிறுவனம் தயங்குகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் அவன் ஒரு சட்டத்தரணி (ஈயடிச்சான் கொப்பி) என்பதால் நிறுவனம் தொடர்பான சட்ட ஆவணங்களை அவனே தயாரிக்கிறான். ஆதலால் அனைத்து குட்டு, சுத்துமாத்துகளும் அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு எதிராக யாராவது தலைமை அதிகாரிகள் குரல் கொடுத்தால் அடுத்து நடப்பதே வேறு! அவன் ஆம குஞ்சனாக இருந்தாலும், வீரகேசரி அலுவலகத்தில் மனைவியிடம் செருப்படி வாங்கியிருந்தாலும் தமிழனின் குறைகளை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த மூளைக் குஞ்சன்.

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு சாதாரணமாக சிரித்து சிங்காரித்துப் போகும் தலைமைக்கு சில காலத்தின் பின்னர் உண்மை வெளிவரும். ஆனால் அப்போது தரமான, தூர சிந்தனையுடைய ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருப்பார்கள்.

நல்ல வருமானம் கிடைக்கின்ற போது சம்பளம் கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது. சாதாரண சாரதியொருவரின் மாதச் சம்பளத்தை விட பத்திரிகையை நடத்துவதற்கு உறுதுணையாய் இருக்கும் ஊடகவியலாளர்களின் சம்பளம் மிகச் சொற்பம் தான். இதனை உரியவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஆம குஞ்சான் - சிங்களவனுக்கு நல்லா குடுப்பான்!

அவன் பற்றி இன்னும் பல உண்மையான தகவல்கள் விரைவில் வரும் நண்பர்களே.

நன்றி.

No comments:

Post a Comment