Monday, June 13, 2016

பணம் பத்தையும் செய்யும்! அதற்கு மேலேயும் செய்யும்!


வீரகேசரி வார வெளியீட்டில் தொழில் புரியும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் மேதாவி பற்றிய பதிவு இது.

வெளித்தோற்றத்தில் நல்ல ஊடகரைப் போல காட்டிக்கொண்டாலும் வெளியில் எங்கெல்லாம் பணம் திண்ண முடியுமோ அங்கெல்லாம் முதலை வாயை திறந்துகொண்டிருப்பதைப் போல காத்துக்கொண்டிருப்பார்.

மிக மோசமான கில்லாடி அவர்.

அவர் ஒரு தனியார் கம்பனிக்கு சொந்தக்காரர். முழு நேரமாக  வீரகேசரியில் இருந்தாலும் அவருடைய எண்ணம் எல்லாம் அந்த கம்பனி மீதுதான் இருக்கும்.

வீரகேசரி பெயரை பயன்படுத்தி யாரிடமெல்லாம் ஆணியை பிடுங்க முடியுமோ அதனை கன கச்சிதமாக செய்யக்கூடியவர் தான் அவர்.

இந்தப் பதிவில் இரண்டாவது பந்தியை வாசிக்கும்போதே பலர் அறிந்துகொண்டிருப்பீர்கள். அந்தப் புகழ் விரும்பியின் கம்பனி பெயர் என்ன? எங்கிருந்தெல்லாம் பணம் பிடுங்குகிறார் என்பதை இன்னும் இரு வாரங்களில் முழுமையாக அறியத்தருகிறோம்.

தொங்கு நானாவின் நெருங்கிய சகாவான அவர் தொங்கு நானாவின தில்லுமுல்லுகள் பலவற்றுக்கும் துணைபோயிருக்கிறார்.

-------------------------------------------------------------------------------------------------------
தனபாலரை கண்டு தொங்கு நானா தொடை நடுங்கிய விவகாரம் நாளைய பதிவில் எதிர்பாருங்கள் தோழர்களே



No comments:

Post a Comment