Saturday, January 7, 2017

கதவைத் திற காற்று வரட்டும்!

(ம. செங்கோட்டுவன்)

இந்த வலைத்தளத்தில் எழுதப்படும் எந்த விடயங்களும் தகுந்த ஆதாரங்கள் இன்றி பிரசுரிக்கப்படுவதில்லை. நாம் இப்போது பாரிய வலையமைப்பாக செயற்பட்டு வருகிறோம்.

வீரகேசரிக்கு எதிராக செயற்படுவது எமது குறிக்கோளல்ல. அங்கு உள்ள கறுப்பாடுகளின் சுயரூபங்களை வெளிக்கொண்டுவருவதே எமது எண்ணமாகும்.


ஏக்கலை புரொஜெக்ட் பற்றியும் அங்கு நடைபெற்ற, நடைபெறும் ஊழல்கள் பற்றியும் நாம் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதனால் சம்பந்தப்ப்பட்டவர்கள் வெள்ளவத்தை பகுதியில் தண்ணியடித்து உளறிக்கொட்டி இன்னும் புலம்பிக்கொண்டிருப்பவர்களையும் நாம் அறிவோம்.

இருக்கட்டும்.
ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கு வெள்ளவத்தை பிரெட்றிகா வீதியில் வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியிருக்கிறார் தயாளன்.

ஒரு சாதாரண பதவியில் இருந்து சற்று காலத்துக்கு முன்னர் தான் சீனியர் மெனேஜராக பதவி உயர்வு பெற்றார். அதற்குள் எப்படி இந்தளவு பணம் சேகரிக்க முடியும் என யோசித்தீர்களா?

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே,

ஒரு சீனியர் மெனேஜர் - அந்தப் பதவி கிடைத்து 3 மாதங்கள் பழைய சம்பளத்துடனே வேலை செய்ய வேண்டும். 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவரது பதவி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும். இது வீரகேசரியில் உள்ள நடைமுறை.

சரி. இந்த ஒரு கோடியே 30 இலட்சம்….. (வாயைப் பிளக்காதீங்க மக்களே) எப்படி கிடைத்தது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. ஏக்கலை புரொஜெக்ட் வாரிக் கொடுத்த பணம்தான் இது. இனி என்ன அவருக்கு?

கதவைத் திற காற்று வரட்டும்! அப்படித் தானே!

சொப்பன சுந்தரி மேல்மருவத்தூர் அம்மையாருடன் சேர்ந்து கொமிஷன் அடித்த பணம் தான் இது.

நாம் ஒரு கேள்வி கேட்கிறோம் - நியாயமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு சீனியர் மெனேஜருக்கு - 40 ஆயிரம் ரூபா வாகன கொடுப்பனவு வழங்கப்படுகிறது. 100 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இந்த 100 லீற்றரை மாதாந்தம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் 100 லீற்றரையும் அலுவலக தேவைக்காக பயன்படுத்துகிறார்களா?

உதாரணத்துக்கு ஆம குஞ்சான்   யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அலுவலக வாகனத்தை, சாரதி சகிதமாக பெற்றுக்கொண்டுதானே செல்கிறார்? அப்படியானால் இந்த செலவீனங்களுக்கு என்ன அர்த்தம்?

இவை அனைத்தும் எங்களுடைய உழைப்பு. எங்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டு யார் யாரோ வாழ்கிறார்கள்.

நாம் எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த செலவீனங்களை குறைத்து ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களுக்காவது சம்பளத்தை அதிகரித்தால் என்ன?

ஒரு கோடிக்கு உரிய கணக்கு, அது பெறப்பட்ட வழிமுறைகளை நாம் விரிவாக தேடிக்கொண்டிருக்கிறோம். இன்று நாளை அல்லாவிட்டாலும் என்றாவது நாம் அதை வெளிப்படுத்துவோம்.

இங்கு மற்றுமொரு உண்மைத் தகவல் -
எம்.டி. கையொப்பமிட்ட வெற்று காசோலைகள் சொப்பன சுந்தரியிடம் உண்டு. எம்.டி. வெளிநாட்டுக்குச் செல்லுமுன்னர் இவ்வாறு கையொப்பமிட்டுச் செல்வது வழமை.

(இன்றும் கூட 6 காசோலைகள் சொப்பன சுந்தரியிடம் (வித் எம்.டி.ஸ் சிக்னேச்சர்) இருக்கின்றன.

இந்த மாதிரி நேரத்தில் தான் வெளியில் கொட்டேஷன்கள் ஏற்கப்பட்டு மிக சூட்சுமமான முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதன் சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சேர்க்குலேஷன் ஜோன்சன் ஏக்கலை புரொஜெக்டில் நன்றாக பிழைத்துக்கொண்ட இன்னொரு நபர். அவருடைய ஏரியா என்பதால் புகுந்து விளையாடினார். இந்த விடயம் எம்.டிக்கும் நன்றாகத் தெரியும்.

வீரகேசரியில் யாராவது முடியுமானால் ஜோன்சனின் வீட்டை போய் பாருங்கள். டொனல்ட் ட்ரம்பின் தங்க மாளிகைக்கு நிகராக வெள்ளி மாளிகை கட்டியிருக்கிறார். இவ்வளவு கோடி கோடியான பணம் எங்கிருந்து?

சாதாரண மனிதராக வலம் வரும்போது கிடைக்காத சொர்க்க வாழ்க்கை இப்போது கிடைத்தது எப்படி?

சிந்தியுங்கள் மக்களே, இது நமது உழைப்பு, நமது பணம்.

இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எமது குழு மிகத் தீவிரமாக இறங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

விரைவில் முக்கிய தகவல்களுடன் சந்திக்கிறோம்.

நன்றி.

(சிந்தியுங்கள் - செயற்படுங்கள் - நம் வாழ்க்கை நம் கையில்)

1 comment: